Tuesday, November 13, 2012

துப்பாக்கி விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இளைய தளபதி விஜய் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றை கொடுத்துள்ளார். கில்லி, போக்கிரி வரிசையில் துப்பாக்கியும் இடம் பிடித்துள்ளது. விஜயின் நடிப்பு பிரமாதம். எல்லாருக்கும் பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் விஜயின் கெட்அப் சூப்பர்.  இப் படத்தில் விஜய் ராணுவ வீரராக வருகிறார். ராணுவ உடை நன்றாக பொருந்துகிறது. வழக்கமான விஜயின் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சி இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு சண்டை பிடித்துள்ளார். திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்துள்ளது. நேரம் போவதே தெரியவில்லை. விஜய் காமெடியிலும் கலக்கியுள்ளார். அது மட்டுமின்றி வழக்கம் போல நடனத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார். 'கூகிள் கூகிள்', 'அட்லாண்டிகா','அலைகா லைக்கா' பாடல் ரசிகர்களை ஆட வைக்கும் அதே நேரம் 'போய் வரவா' பாடல் கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைத்துள்ளது. விஜய் கதாப்பாதிரமாகவே வாழ்ந்துள்ளார் எனலாம். காஜல் அகர்வால் நடிப்பிலும்,நடனத்திலும் தன திறமையை காட்டியுள்ளார்.
விஜய் தன் குழுவுடன் தீவிரவாதிகளை என்கவுண்டர் பண்ணும் காட்சி அற்புதம். ஜெயராம் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் எதிர்மறை கருத்துக்களை வரவழைத்துள்ளது. வில்லனின் நடிப்பு பிரமாதம். அதே வேளை அவரை இயக்குனர் முருகதாஸ் நன்கு பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஏழாம்அறிவில் டாங்லி கதாப்பாத்திரம் போல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக போயிருக்கும். சத்தியன் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஹரிஷ் ஜெயராஜின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது. திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டிய படம். நேற்றைய தினம் தான் படம் பார்த்தேன். இரவு 12.30 மணிக் காட்சி. நேற்று மட்டும் 5 தடவை படம் காண்பிக்கப் பட்டது.  5 தடவையும் திரையரங்கு நிறைந்து வழிந்தது.

படத்துக்கு 85% புள்ளிகள் போடலாம்.

Thursday, November 8, 2012

காந்தியின் பக்தன் நான்: கமலஹாசன் பேட்டி

உலகநாயகன் கமல் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரோ 3டி’ ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
டிரெய்லரை வெளியிட்ட கமலஹாசன் பேசுகையில், ‘விஸ்வரூபம்’ படத்தின் ‘ஆரோ 3டி’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
இசை வெளியீட்டு விழாவை முக்கிய நகரங்களில் இன்று நடத்த திட்டமிட்டோம். வானிலை சாதகமில்லாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக 25 ஊர்களில் ‘விஸ்வரூபம்’ டிரெய்லரை ரசிகர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு ரலீஸ் செய்த நேரத்தில் மற்ற ஊர்களில் 30 ஆயிரம் ரசிகர்கள் அரங்குகளில் அமர்ந்து இதை கண்டு இருப்பார்கள்.
‘விஸ்வரூபம்’ ரிலீஸ் திகதி இன்னும் முடிவாகவில்லை. இந்தியிலும் இப்படத்தை வெளியிடுகிறோம் என்றார்.
விஸ்வரூபம்’ இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல.
இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். நான் காந்தியின் பக்தன்.
இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன்.
மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன்.
எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை என்றும் காந்திய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
 

அஜித்திடம் நலம் விசாரித்த நட்சத்திரங்கள்.

படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து சக நடிகர், நடிகைகள் அனைவரும் அஜித்திடம் நலம் விசாரித்தனர்.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமொன்றில் அஜித் நடித்துவருகிறார்.
படத்திற்கான சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த போது அஜித்தின் கால் கார் டயரில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது மற்ற காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு, நயன்தாரா, ஆர்யா ஆகியோர் காயம் குறித்து நலம் விசாரித்தனர்.
இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்.

கோச்சடயானுக்கு சொந்தக் குரலில் பேசும் தீபிகா..

எப்பொழுது பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கோச்சடயான்' பற்றிய தகவல்கல் வந்த விதமாகவே உள்ளன. இத் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவூட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். நாளுக்கு நாள் இத் திரைப்படத்துக்கான எதிர் பார்ப்பு அதிகரித்த விதமாகவே உள்ளது.

இத் திரைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கி வருகின்றார். அது ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இப் படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர்.

இப்படத்தில் 'cutting edge technology' மூலம் நேற்றைய கலைஞர்களான நாகேஷ், வீரப்பா, நம்பியார், மனோகர், அசோகன் ஆகியோரை இணைக்கிறார்கள்.

சர்வதேச அளவில் வெளியிட இருப்பதால் ஜப்பான்,இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இப் படத்தை வெளியிடுகிறார்கள். 

இத் திரைப்படத்துக்காக பாலிவூட் அழகி தீபிகா படுகோன் சொந்த குரலில் பேசி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு...

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு எழுந்துள்ளது.
இவருக்கும் இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள்.
எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர்.
பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என்று பட்டோடி நவாப் குடும்பத்தினருக்கு நிறைய சொத்துகள் உள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.750 கோடியாகும்.
மன்சூர் அலிகான் பட்டோடியின் ஒரே மகன் சயீப் அலிகான் என்பதால் இந்த சொத்துக்கள் அவர் கைவசம் உள்ளன.
சயீப் அலிகான் சகோதரிகள் சபா, சோகா அலிகான் ஆகியோரும் இதனை அனுபவிக்கிறார்கள்.
ஆனால் மறைந்த மன்சூர் அலிகான் சகோதரிகள் சலீகா, சபீகா ஆகியோரும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
தங்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்றும், வற்புறுத்தி வருகிறார்கள்.
இதனால் சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் குழப்பமடைந்து உள்ளார். இவர்களின் சொத்து சண்டையை பார்த்த நடிகை கரீனா கபூரும் அதிர்ச்சியாகியுள்ளார்.
சொத்துக்களை குடும்பத்தினர் எல்லோருக்கும் பிரித்து கொடுக்க மத்தியஸ்தர்களை வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி வெளியீடு தள்ளி வைப்பு...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் துப்பாக்கி. இத் திரைப்படம் நாளை ஒன்பதாம் திகதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் இத் திரைப்படம் தீபாவளி தினத்தன்று தான் வெளிவரவுள்ளது.

இத் தீபாவளி வெளியீடாக சிம்புவின் 'போடா போடி', தங்கர்பச்சானின் 'அம்மாவின் கைபேசி' ஆகிய திரைப்படங்களும் வரவிருப்பது யாவரும் அறிந்ததே. 'அஜந்தா ' , நாகார்ஜுனா,அனுஷ்கா நடித்துள்ள தெலுங்குப் படமான 'தம்மார்க்கம்' நாளை ஒன்பதாம் திகதி திரைக்கு வருகின்றன.

இதில் 'அஜந்தா' திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இத் திரைப்படத்தை ராஜ்பா ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

அத்துடன் விஷ்ணு, சுனைனா நடித்துள்ள 'நீர்ப்பறவை' படமும் தீபாவளி தினத்தன்று வெளிவருகிறது. இத் திரைப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். அத்துடன் புதுமுகங்கள் நடித்துள்ள 'காசிக்குப்பம்' படமும் தீபாவளிக்கு வெளியாகின்றது.

தீபாவளி தினத்தன்று வரவிருந்த 'கள்ளத்துப்பாக்கி' 23ம் திகதி வெளியாகின்றது.