Sunday, October 21, 2012

பேரரசுவின் கொலைவெறித் தாக்குதல்- திருத்தணி




எல்லாருக்கும் வணக்கமுங்கோ... எல்லாத்துக்கும் முதல் இந்த பக்கத்தை ஆரம்பிக்க காரணமா இருந்த திருத்தணி பட குழுவுக்கு நன்றி.. அந்த படத்த பாத்து மனம் நொந்து போய் எழுதத் தொடங்குறன்.


முதல்ல இந்த படத்த பத்தி எனக்கு நிறைய உண்மை தெரிஞ்சாகணும். ஒண்ணு இந்த படத்துக்கு ஹீரோ விஜய்யா? பரத்தா?. அடுத்தது இது இந்த இயக்குனர் பேரரசு ரீமேக் எண்டுறத பிழையா விளங்கிக் கொண்டுடாரா?. இன்னும் ஒண்ணு இந்த இயக்குனர் வேற இயக்குனர்களுட படமே பாக்குறல்லையா? வேற இயக்குனர்களுட படத்த பாக்காட்டியும் பறவாயில்ல அவர் இயக்கின படத்தையாவது பாக்கலாமே..


எனக்கு இப்பிடி சந்தேகங்கள் வர நிறையக் காரணங்கள் இருக்கு. படத்திட ஒபெனிங் சீன்லையே விஜய் ரவுடிக் கும்பலை புரட்டி எடுப்பது போல தான் காட்டியிருந்தாங்க. பிறகு எந்த சீன்ல பாத்தாலும் விஜய்ட கதை தான் போகுது. எழுத்தோட்டத்திலையே எம்.ஜி.ஆர் ட பாட்டப் போட்டு சம்பாதிக்க பாத்திருக்காங்க. பேரரசு இதுக்கு முதல் இயக்கின திருப்பாச்சி,சிவகாசி, திருப்பதி எல்லா படத்துட கலவையாவும் இந்தப் படம் வந்திருக்கு. அது மட்டும் இல்லாம கதை, திரைக்கதை, இயக்கம், வசனம், பாடல்களோட மட்டும் விடாம இந்த முறை இவரின் கொலைவெறித் தாக்குதல் இசை வரை பரவியிருக்கு. ஒழுங்கா இசையமச்சா பறவாயில்ல, இதுக்கு முதல் வந்த இவர்ட பட பாடல்கள்ட இசைய சுட்டு வரிகளை மட்டும் மாத்தி பாட்டு போட்டிருக்கார்.(கேளுங்க மகா ஜனங்களே இதுக்கு பேர் தான் இசயமைக்கிறதாம்.) இந்திய சினிமாத் துறை இன்றைய கால கட்டத்தில் எவளவோ முன்னேறிவிட்டது. அந்நிய முதலீடுகள் சினிமாத்துறைக்கு எவளவோ கிடைக்கிறது. இப்பிடி இருக்ககுள்ள இப்பிடி படம் எடுத்தா மக்களுக்கு சினிமா துறையில் வெறுப்பு தான் வரும். நல்லா இருந்த பரத்த ஆக்சன் ஹீரோ வா மாத்தி அவருக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துட்டார். படத்துக்கு பிளஸ் பாயிண்ட் எண்டா நாயகி சுனைனாவ சொல்லலாம். இன்னொரு பிளஸ் பாயிண்ட் ராஜ்கிரண் எண்டு சொல்லலாம். ஆனா ராஜ்கிரண்ட கம்பீரமான குரலை கேட்காதது படத்துக்கு மைனஸ் பாயிண்ட் தான். வேறு ராஜ்கிரண்ட இராணுவ வாழ்கையை காட்டியது செம காமெடியா இருந்துது. துவக்க தூக்கிட்டு மரத்த சுத்தி சுத்தி விளையாடுறாரு. படத்தில் மொக்கை பஞ்ச்உம் பழகிப்போன வசனங்களும் பார்வையாளர்களை கடுப்பாக்குகிறது. எப்ப தான் இந்த இயக்குனர் திருந்தப் போறாரோ தெரியா.. வளர்ந்து வரும் நடிகரான பரத் தனது படத்திற்கான கதையை சிறப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும். இயக்குனருக்காக கதையை தேர்ந்தெடுக்காமல் நல்ல கதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.


மொத்தத்துல இது திரையரங்குக்கு போய் பாக்க வேண்டிய படமே இல்ல. இனி சும்மா நுழைவு சீட்ட தந்தாலும் நான் இந்த படத்த பாக்க போக மாட்டன். 

No comments:

Post a Comment