இன்று கோடம்பாக்கத்தை கலக்கிக் கொண்டிருக்கும் விடயம் என்னவென்றால், இயக்குனர் கே.வி.ஆனந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கதை சொன்னது தான். ஆனால் இதை இயக்குனர் கே.வி.ஆனந்த் முற்றாக மறுத்துள்ளார். அவ்வாறு எந்தக் கதையும் தான் ரஜினிக்கு சொல்லவில்லை என்றும் அது வதந்தியே என்றும் கூறியுள்ளார். தன்னிடம் தற்போது கைவசம் எந்தப் படத்திற்கான கதையும் இல்லையாம். தனது அடுத்த படத்திற்கான கதையை இனித்தான் சுடப் போவதாகவும் மன்னிக்கவும் எழுதப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினியை இயக்கும் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் இறுதியாக இயக்கிய திரைப்படம் மாற்றான். இது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை சரியாக பூர்த்தி செய்யவில்லை. ஆங்கிலப் படத்தின் தழுவலாக இப்படம் வெளிவந்திருந்தது. அது மட்டுமல்லாமல் ஒட்டிப்பிறந்த சகோதரர்களின் கதையை மையமாகக் கொண்டு இதே காலப்பகுதியில் வெளிவந்த சாருலதா என்கிற திரைப்படம் மாற்றானின் மையக்கருவை வெளிக்கொண்டு வந்ததால் ரசிகர்களுக்கு புதிதான கதையாக தெரியவில்லை.



No comments:
Post a Comment