Thursday, October 25, 2012

ஆர்யாவுக்கு முத்தம் கொடுக்க தயங்கிய அஞ்சலி

இந்தியின் டெல்லி பெல்லி திரைப்படத்தின் ரீமேக் தான் ஆர்யா,சந்தானம், அஞ்சலி,பிரேம்ஜி நடிக்கும் சேட்டை. இத் திரைப்படத்தை கண்ணன் இயக்குகின்றார். டெல்லி பெல்லியில் நாயகன் இம்ரான் கான் இற்கும் நாயகி பூர்ணாவிற்கும் முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதே போல் தமிழிலும் முத்தக்காட்சி இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கண்ணன் எண்ணியுள்ளார். இம் முத்தக்காட்சியைப் பற்றி முன்னர் அஞ்சலியிடம் கூறவில்லையாம். கூறாமலே அவரின் கால்ஷீட்டை வாங்கி விட்டார் கண்ணன். இப்பொழுது இத் திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட படி அந்த முத்தக்காட்சியையும் மும்பையிலேயே படமாக்க முடிவு செய்திருக்கிறது படக்குழு. 

காட்சி படமாக்கப்பட முன்பு தான் அஞ்சலியிடம் இந்த முத்தக்காட்சி பற்றி இயக்குனர் தெரிவித்திருந்தார். இதைக்கேட்ட அஞ்சலி அதிர்ந்து போனார். முத்தக்காட்சிக்கும் தயங்கினார். இதனால் படப்பிடிப்பில் பதட்டம் நிலவியது.
பின்னர் இயக்குனர் அஞ்சலியிடம், நீங்கள் படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் தைரியமான பத்திரிகையாளராகவும் நடிக்கிறீர்கள். இக் காட்சி படத்தையும் உங்கள் வேடத்தையும் மெருகேற்றும் எனவும் கூறி சமாளித்துள்ளார். இறுதியில் சமாதானம் ஆனார் அஞ்சலி. முத்தக்காட்சியும் நடந்தது.(ஆர்யாக்கு முந்தி த்ரிஷா இப்ப அஞ்சலி ;) )

No comments:

Post a Comment