Wednesday, October 24, 2012

கௌரவ பிளாக் பெல்ட் விருது வாங்கிய மோகன்லால்

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தென் கொரிய நாட்டின் கராத்தே அமைப்பின் கவுரவ பிளாக்பெல்ட் விருது வழங்கப்பட உள்ளது.
இதுபோன்ற விருது ஏற்கனவே, இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. மலையாள, தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மோகன்லால். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவருக்கு மத்திய ராணுவத்தின், "லெப்டினென்ட் கர்னல்" அந்தஸ்து கொண்ட கவுரவ பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் கொரிய அரசின் கீழிலுள்ள, தாய்கோண்டா அமைப்பின் தலைமை நிலையமான, குக்கிஓண் சார்பில் ஆண்டுதோறும் கவுரவ பிளாக்பெல்ட் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, இந்த விருது நடிகர் மோகன்லாலுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர், 1977-78ம் ஆண்டுகளில் கேரளாவில் மாநில குத்துச்சண்டை சாம்பியனாக இருந்தார். மேலும், திரைப்படங்களில் வீர விளையாட்டுக்களில் நடித்தும் சிறப்பித்துள்ளார்.
இதுபோன்ற, பல்வேறு சாதனைகளுக்காக, நடிகர் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விருது வழங்கும் விழா திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், கேரள தாய்கோண்டா அமைப்பின் பொது செயலாளர் அஜி தெரிவித்தார்.

No comments:

Post a Comment