Tuesday, November 13, 2012

துப்பாக்கி விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு இளைய தளபதி விஜய் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்றை கொடுத்துள்ளார். கில்லி, போக்கிரி வரிசையில் துப்பாக்கியும் இடம் பிடித்துள்ளது. விஜயின் நடிப்பு பிரமாதம். எல்லாருக்கும் பிடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் விஜயின் கெட்அப் சூப்பர்.  இப் படத்தில் விஜய் ராணுவ வீரராக வருகிறார். ராணுவ உடை நன்றாக பொருந்துகிறது. வழக்கமான விஜயின் பறந்து பறந்து அடிக்கும் சண்டைக்காட்சி இல்லாமல் கதைக்கு ஏற்றவாறு சண்டை பிடித்துள்ளார். திரைக்கதை விறுவிறுப்பாக நகர்ந்துள்ளது. நேரம் போவதே தெரியவில்லை. விஜய் காமெடியிலும் கலக்கியுள்ளார். அது மட்டுமின்றி வழக்கம் போல நடனத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார். 'கூகிள் கூகிள்', 'அட்லாண்டிகா','அலைகா லைக்கா' பாடல் ரசிகர்களை ஆட வைக்கும் அதே நேரம் 'போய் வரவா' பாடல் கண்ணிலிருந்து கண்ணீரை வரவழைத்துள்ளது. விஜய் கதாப்பாதிரமாகவே வாழ்ந்துள்ளார் எனலாம். காஜல் அகர்வால் நடிப்பிலும்,நடனத்திலும் தன திறமையை காட்டியுள்ளார்.
விஜய் தன் குழுவுடன் தீவிரவாதிகளை என்கவுண்டர் பண்ணும் காட்சி அற்புதம். ஜெயராம் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் நிறைவான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். படத்தின் ஒரு சில காட்சிகள் மட்டும் தான் எதிர்மறை கருத்துக்களை வரவழைத்துள்ளது. வில்லனின் நடிப்பு பிரமாதம். அதே வேளை அவரை இயக்குனர் முருகதாஸ் நன்கு பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஏழாம்அறிவில் டாங்லி கதாப்பாத்திரம் போல் அமைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக போயிருக்கும். சத்தியன் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஹரிஷ் ஜெயராஜின் இசை படத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

மொத்தத்தில் படம் நன்றாக உள்ளது. திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டிய படம். நேற்றைய தினம் தான் படம் பார்த்தேன். இரவு 12.30 மணிக் காட்சி. நேற்று மட்டும் 5 தடவை படம் காண்பிக்கப் பட்டது.  5 தடவையும் திரையரங்கு நிறைந்து வழிந்தது.

படத்துக்கு 85% புள்ளிகள் போடலாம்.

Thursday, November 8, 2012

காந்தியின் பக்தன் நான்: கமலஹாசன் பேட்டி

உலகநாயகன் கமல் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் ‘ஆரோ 3டி’ ஒலி தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ளது.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
டிரெய்லரை வெளியிட்ட கமலஹாசன் பேசுகையில், ‘விஸ்வரூபம்’ படத்தின் ‘ஆரோ 3டி’ டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
இசை வெளியீட்டு விழாவை முக்கிய நகரங்களில் இன்று நடத்த திட்டமிட்டோம். வானிலை சாதகமில்லாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக 25 ஊர்களில் ‘விஸ்வரூபம்’ டிரெய்லரை ரசிகர்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இங்கு ரலீஸ் செய்த நேரத்தில் மற்ற ஊர்களில் 30 ஆயிரம் ரசிகர்கள் அரங்குகளில் அமர்ந்து இதை கண்டு இருப்பார்கள்.
‘விஸ்வரூபம்’ ரிலீஸ் திகதி இன்னும் முடிவாகவில்லை. இந்தியிலும் இப்படத்தை வெளியிடுகிறோம் என்றார்.
விஸ்வரூபம்’ இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான படமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், இந்த படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல.
இந்தியாவில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். நான் காந்தியின் பக்தன்.
இங்கு எந்த மதத்தினர் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று பார்க்க மாட்டேன்.
மனிதர்களைத்தான் பார்க்கிறேன். மதங்களை கொண்டாடுவது இல்லை. மனிதர்களை கொண்டாடுகிறேன்.
எந்த மதத்தினரையும் வித்தியாசமாக பார்ப்பது இல்லை என்றும் காந்திய வழியிலேயே எனது அணுகுமுறைகளும் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
 

அஜித்திடம் நலம் விசாரித்த நட்சத்திரங்கள்.

படப்பிடிப்பில் அஜித்திற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து சக நடிகர், நடிகைகள் அனைவரும் அஜித்திடம் நலம் விசாரித்தனர்.
விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமொன்றில் அஜித் நடித்துவருகிறார்.
படத்திற்கான சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த போது அஜித்தின் கால் கார் டயரில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டாலும் சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது மற்ற காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு, நயன்தாரா, ஆர்யா ஆகியோர் காயம் குறித்து நலம் விசாரித்தனர்.
இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் நடிக்கின்றனர்.

கோச்சடயானுக்கு சொந்தக் குரலில் பேசும் தீபிகா..

எப்பொழுது பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கோச்சடயான்' பற்றிய தகவல்கல் வந்த விதமாகவே உள்ளன. இத் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவூட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். நாளுக்கு நாள் இத் திரைப்படத்துக்கான எதிர் பார்ப்பு அதிகரித்த விதமாகவே உள்ளது.

இத் திரைப்படத்தை ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கி வருகின்றார். அது ஒரு அனிமேஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இப் படத்தை சர்வதேச அளவில் வெளியிட உள்ளனர்.

இப்படத்தில் 'cutting edge technology' மூலம் நேற்றைய கலைஞர்களான நாகேஷ், வீரப்பா, நம்பியார், மனோகர், அசோகன் ஆகியோரை இணைக்கிறார்கள்.

சர்வதேச அளவில் வெளியிட இருப்பதால் ஜப்பான்,இத்தாலி, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இப் படத்தை வெளியிடுகிறார்கள். 

இத் திரைப்படத்துக்காக பாலிவூட் அழகி தீபிகா படுகோன் சொந்த குரலில் பேசி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு...

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் குடும்பத்தில் சொத்து தகராறு எழுந்துள்ளது.
இவருக்கும் இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனால் சொத்துக்கள் கைவிட்டு போய்விடுமோ என்று குடும்பத்தினர் அஞ்சுகிறார்கள்.
எனவே அவற்றை பிரித்துக் கொடுக்கும்படி போர்க்கொடி தூக்கி உள்ளனர். சயீப் அலிகான் ‘பட்டோடி நவாப்’ பரம்பரையை சேர்ந்தவர்.
பட்டோடி அரண்மனை, விவசாய நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் என்று பட்டோடி நவாப் குடும்பத்தினருக்கு நிறைய சொத்துகள் உள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.750 கோடியாகும்.
மன்சூர் அலிகான் பட்டோடியின் ஒரே மகன் சயீப் அலிகான் என்பதால் இந்த சொத்துக்கள் அவர் கைவசம் உள்ளன.
சயீப் அலிகான் சகோதரிகள் சபா, சோகா அலிகான் ஆகியோரும் இதனை அனுபவிக்கிறார்கள்.
ஆனால் மறைந்த மன்சூர் அலிகான் சகோதரிகள் சலீகா, சபீகா ஆகியோரும் இந்த சொத்துக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
தங்களுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்றும், வற்புறுத்தி வருகிறார்கள்.
இதனால் சயீப் அலிகான் தாய் சர்மிளா தாகூர் குழப்பமடைந்து உள்ளார். இவர்களின் சொத்து சண்டையை பார்த்த நடிகை கரீனா கபூரும் அதிர்ச்சியாகியுள்ளார்.
சொத்துக்களை குடும்பத்தினர் எல்லோருக்கும் பிரித்து கொடுக்க மத்தியஸ்தர்களை வைத்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

துப்பாக்கி வெளியீடு தள்ளி வைப்பு...

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் துப்பாக்கி. இத் திரைப்படம் நாளை ஒன்பதாம் திகதி வெளிவருவதாக இருந்தது. ஆனால் இத் திரைப்படம் தீபாவளி தினத்தன்று தான் வெளிவரவுள்ளது.

இத் தீபாவளி வெளியீடாக சிம்புவின் 'போடா போடி', தங்கர்பச்சானின் 'அம்மாவின் கைபேசி' ஆகிய திரைப்படங்களும் வரவிருப்பது யாவரும் அறிந்ததே. 'அஜந்தா ' , நாகார்ஜுனா,அனுஷ்கா நடித்துள்ள தெலுங்குப் படமான 'தம்மார்க்கம்' நாளை ஒன்பதாம் திகதி திரைக்கு வருகின்றன.

இதில் 'அஜந்தா' திரைப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். இத் திரைப்படத்தை ராஜ்பா ரவிசங்கர் இயக்கியுள்ளார்.

அத்துடன் விஷ்ணு, சுனைனா நடித்துள்ள 'நீர்ப்பறவை' படமும் தீபாவளி தினத்தன்று வெளிவருகிறது. இத் திரைப்படத்தை சீனுராமசாமி இயக்கியுள்ளார். அத்துடன் புதுமுகங்கள் நடித்துள்ள 'காசிக்குப்பம்' படமும் தீபாவளிக்கு வெளியாகின்றது.

தீபாவளி தினத்தன்று வரவிருந்த 'கள்ளத்துப்பாக்கி' 23ம் திகதி வெளியாகின்றது.

Tuesday, November 6, 2012

கோச்சடையானிலிருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் படம் ‘கோச்சடையான்’.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
வரலாற்று கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
இப்படம் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இயக்குனர் மேற்பார்வையை கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துக் கொண்டிருந்தார்.
தற்போது அந்த பொறுப்பு இயக்குனர் மாதேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் மாதேஷ் ‘மதுர’, ‘சாக்லேட்’, ‘மிரட்டல்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் அடைந்த அஜித்..

பில்லா 2 படத்தை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.
வேகமாக வளர்ந்து வரும் இந்தப் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு அஜித் தாவுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
25 அடி உயரத்திற்கு மேல் இருந்து குதிக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று விஷ்ணுவர்த்தன் அறிவுறுத்திய பின்னரும், டூப் இல்லாமல் தானே நடித்தார் அஜித்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, அவரது கால் காரின் முன்பக்க டயரில் சிக்கியது.
காயம் அடைந்த அஜித்துக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், படப்பிடிப்பும் சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அடிபட்ட பின்னரும் வலியை பொறுத்துக் கொண்டு மீண்டும் அந்த சண்டைக் காட்சியில் நடித்து முடித்தார் அஜீத்.
மங்காத்தா படப்பிடிப்பின் போதும் காலில் காயம் ஏற்பட்டபோதும் வலியை பொறுத்துக்கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, November 5, 2012

ஜாலியான 'ஐ டி' ஹாக்கராக வருகிறார் அஜித்.

கொலிவுட்டில் அஜித், ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோர் நடிப்பில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.
படத்தின் வசனக்காட்சிகளை எழுபது நாட்களில் மும்பையில் படமாக்க இயக்குனர் விஷ்ணுவர்தன் திட்டமிட்டுள்ளார்.
இப்படத்தில் நாயகன் அஜித் ஜாலியான 'ஐ டி' ஹாக்கராக வருகிறார்.
கொலிவுட் படங்களில் அஜித் வித்தியாசமான வேடங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இன்னும் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அஜித்தை இப்படத்தில் பார்க்கலாம்.
அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.
இதில் ஆக்சன் ஹீரோ இமேஜை உதறி தள்ளி விட்டு குடும்ப ரசிகர்களை கவரும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறது கொலிவுட் பட வட்டாரம்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகிறது பரதேசி..

இயக்குனர் பாலா இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படம் பரதேசி. இதில் அதர்வா, தன்ஷிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இத் தீபாவளிக்கு வெளியாகும் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இத் திரைப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது. இம் மாதம் 24ம்  திகதியளவில் இப் படத்தின் பாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப் படம் 1930களின் பின்னணியில் உருவாக்கப்படுகிறது. மலையாள நாவல் ஒன்றின் கதையை மையமாகக் கொண்டு இப் படத்தை இயக்கியுள்ளார் பாலா. நாஞ்சில் நாடன் இப் படத்திற்கான வசனத்தை எழுதியுள்ளார்.

யோஹனில் விஜய்க்கு பதில் மகேஷ் பாபு...

கொலிவூடில் கெளதம்மேனன் இயக்கம் திரைப்படம் 'யோகன்'. இத் திரைப்படத்தை விஜயை வைத்து இயக்குவதாக இருந்தது. எனவே இத் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இத் திரைப்படம் இப்பொழுது கைவிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் ஆங்கில பாணியில் இருந்ததால் கதையில் மாற்றத்தை செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி படம் பண்ணுவோம் என்று விஜய் கூறி விட்டார். ஆனால் கெளதமிற்கு மூன்று மொழியிலும் இப் படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை. ஆகவே தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நாயகனான மகேஷ் பாபுவை நாடியுள்ளார். மகேஷ் பாபுவும் சம்மதம் தெரிவித்து விட்டார். திரைக்கதையையும் திரைப்படத்தின் தலைப்பையும் மாற்றி கெளதம் பட வேலையில் இறங்கவுள்ளார்.

சகுனமே சரியில்லையே... துப்பாக்கி வேற வரப் போகுது, என்ன ஆக போகுதோ..

Thursday, November 1, 2012

விஜயின் கூகிள் கூகிள் பாடல் உருவாகும் காட்சி


கடுப்பாகியுள்ள ஷங்கர்..

சீன காட்டிற்குள் விறுவிறுவென நடந்து வந்த ஐ படப்பிடிப்பை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் படக்குழு.
இயக்குனர் ஷங்கரின் ஐ, படப்பிடிப்பு சீனாவில் 40 நாட்கள் நடந்துள்ளது.
இந்த 40 நாட்களில் ரூ.40 கோடியை தாராளமாக செலவு செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இதற்கிடையே சியான் விக்ரமும் எமியும் அடிக்கடி காட்டிற்குள் சென்று விடுகிறார்களாம். இதனால் சற்று கடுப்பாகியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இதை தனது டுவிட்டரில் கொட்டிய எமி, ‘இப்போது ஜெட் லீ யின் ‘க்ரோச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்’ படப்பிடிப்பு நடந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நானும் விக்ரமும் மட்டும் இருக்கிறோம். வேற ஏதாவது டீடெய்ல்ஸ் வேண்டுமா?’ என்று கேட்கிறார்.
ஏற்கனவே, இரவு நேர விருந்துகளுக்கு சென்று விட்டு மறுநாள் படப்பிடிப்பில் வந்து எமி தூங்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரகுமானின் கடல் திரைப்பட பாடல் வெளியீடு

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் கடல் படத்தின் ஒரே ஒரு பாடல் வரும் 3ம் திகதி வெளியாகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் வளர்ந்து வரும் கடலில் கார்த்திக் மகன் கௌதமும்
ராதா இளைய மகள் துளசியும் நடிக்கின்றனர்.
முழுநீளமாக கடல் சார்ந்தே இப்படப்பிடிப்பு நடந்து வருகிறது.
படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தில் வரும் நெஞ்சுக்குள்ளே என்ற ஒரு பாடலை வரும் 3ம் திகதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த பாடலை ஒரே நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்காக எம்.டி.வி மூலம் வெளியிடவிருக்கிறார்கள்.
இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாகவே இசையமைக்க போகிறார்.
இந்நிகழ்ச்சி வரும் 3ம் திகதி இரவு 8 மணிக்கு எம்.டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

வெடிக்கும் விஜய் ..

தீபாவளிக்கு முன்னரே சரவெடி ஆரம்பித்து விட்டது. நம்ம விஜயின் துப்பாக்கி பற்றித்தான் சொல்லுறன். படம் வெளியாக முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.


விஜய், முருகதாஸ்,கலைப்புலி தாணு கூட்டணியில் எதிர்வரும் ஒன்பதாம் திகதி துப்பாக்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. விஜய் வேறு இது போன்ற படத்தில் நடித்ததே இல்லை என்று கூறி விட்டார். அதனால் படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து விட்டது. முருகதாஸ் இப் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இப் படம் தமிழில் வெற்றி பெற்றால் இந்தியிலும் எடுக்க முடிவு செய்துள்ளாராம்...