Monday, November 5, 2012

யோஹனில் விஜய்க்கு பதில் மகேஷ் பாபு...

கொலிவூடில் கெளதம்மேனன் இயக்கம் திரைப்படம் 'யோகன்'. இத் திரைப்படத்தை விஜயை வைத்து இயக்குவதாக இருந்தது. எனவே இத் திரைப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் இத் திரைப்படம் இப்பொழுது கைவிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் ஆங்கில பாணியில் இருந்ததால் கதையில் மாற்றத்தை செய்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி படம் பண்ணுவோம் என்று விஜய் கூறி விட்டார். ஆனால் கெளதமிற்கு மூன்று மொழியிலும் இப் படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை. ஆகவே தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நாயகனான மகேஷ் பாபுவை நாடியுள்ளார். மகேஷ் பாபுவும் சம்மதம் தெரிவித்து விட்டார். திரைக்கதையையும் திரைப்படத்தின் தலைப்பையும் மாற்றி கெளதம் பட வேலையில் இறங்கவுள்ளார்.

சகுனமே சரியில்லையே... துப்பாக்கி வேற வரப் போகுது, என்ன ஆக போகுதோ..

No comments:

Post a Comment