Tuesday, November 6, 2012

காயம் அடைந்த அஜித்..

பில்லா 2 படத்தை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் அஜித்.
வேகமாக வளர்ந்து வரும் இந்தப் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்சி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நேற்று நடந்த படப்பிடிப்பில் ஒரு காரில் இருந்து இன்னொரு காருக்கு அஜித் தாவுவது போன்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது.
25 அடி உயரத்திற்கு மேல் இருந்து குதிக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று விஷ்ணுவர்த்தன் அறிவுறுத்திய பின்னரும், டூப் இல்லாமல் தானே நடித்தார் அஜித்.
இந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, அவரது கால் காரின் முன்பக்க டயரில் சிக்கியது.
காயம் அடைந்த அஜித்துக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், படப்பிடிப்பும் சில மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
அடிபட்ட பின்னரும் வலியை பொறுத்துக் கொண்டு மீண்டும் அந்த சண்டைக் காட்சியில் நடித்து முடித்தார் அஜீத்.
மங்காத்தா படப்பிடிப்பின் போதும் காலில் காயம் ஏற்பட்டபோதும் வலியை பொறுத்துக்கொண்டு நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment