Thursday, November 1, 2012

கடுப்பாகியுள்ள ஷங்கர்..

சீன காட்டிற்குள் விறுவிறுவென நடந்து வந்த ஐ படப்பிடிப்பை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் படக்குழு.
இயக்குனர் ஷங்கரின் ஐ, படப்பிடிப்பு சீனாவில் 40 நாட்கள் நடந்துள்ளது.
இந்த 40 நாட்களில் ரூ.40 கோடியை தாராளமாக செலவு செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இதற்கிடையே சியான் விக்ரமும் எமியும் அடிக்கடி காட்டிற்குள் சென்று விடுகிறார்களாம். இதனால் சற்று கடுப்பாகியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இதை தனது டுவிட்டரில் கொட்டிய எமி, ‘இப்போது ஜெட் லீ யின் ‘க்ரோச்சிங் டைகர் ஹிட்டன் ட்ராகன்’ படப்பிடிப்பு நடந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் நானும் விக்ரமும் மட்டும் இருக்கிறோம். வேற ஏதாவது டீடெய்ல்ஸ் வேண்டுமா?’ என்று கேட்கிறார்.
ஏற்கனவே, இரவு நேர விருந்துகளுக்கு சென்று விட்டு மறுநாள் படப்பிடிப்பில் வந்து எமி தூங்குகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment